Tuesday 22 September 2020

இருந்தும் நான்..

 உறைந்த மூளை

உடைந்த நெஞ்சம்

அறைந்த வாழ்க்கை

அழிந்த நான் 


அறுந்த தாபம்

அகன்ற மேகம்

திறந்த வானம்

தொலைந்த நான் 


முறிந்த நேசம்

முடிந்த காலம்

தெரிந்த கானல்

தெளிந்த நான்


இருந்த காலை

இழந்த மாலை

புரிந்த வேளை

எரிந்த நான்..



2 comments: