காலத்தின் தோட்டத்தில்
நாம் எல்லோரும் பூக்கள்
மலர்கிறோம்
சிலர் விடியலில்,
சிலர் மாலையில்
சிலர் நள்ளிரவில்
ஆனால் எல்லோரும் மலர்கிறோம்
ஒவ்வொருவருக்கும்
ஒரு பருவகாலம் உண்டு
-
மரங்கள் இலைகளை உதிர்க்கின்றன
இதனை இழப்பென்கிறான் மனிதன்
புதுப்பிறப்பென்கிறது இயற்கை
இது வாழ்வின் தாளம் என்கிறது காலம்
-
வானத்தில் பறக்கும் பறவைகளுக்கு
பாதை தெரிவதில்லை
ஆனால் இலக்கு தெரிகிறது
அதுபோலவே நமக்கும்
நாளைகள் தெரிவதில்லை
ஆனால் வழி தெரிகிறது
-
ஒரு குழந்தை அழுகிறது
அதன் கண்ணீரில் ஒரு கடல் பிறக்கிறது
யாரோ ஒரு முதியவர் சிரிக்கிறார்
அவர் சிரிப்பில் ஒரு வானவில் விரிகிறது
இரண்டுக்கும் இடையே
காலம் ஊஞ்சலாடுகிறது
-
காலம் என்பது
மூன்று பெண்கள் நெய்யும் துகில்
ஒருத்தி நேற்றின் நினைவுகளால் நெய்கிறாள்
ஒருத்தி இன்றின் நிகழ்வுகளால் நெய்கிறாள்
ஒருத்தி நாளையின் கனவுகளால் நெய்கிறாள்
மூவரும் ஒரே நூலால் நெய்கிறார்கள்
அந்த நூலைத்தான் அன்பென்கிறோம்
-
ஆழமான நதியின் கரையில் அமர்ந்து
நீரோட்டம் அப்படியே நிற்பதாய்
எண்ணும் பயணியைப் போல
காலம் நம்மைக் கடந்து செல்வதாக
நாம் நினைக்கிறோம்
ஆனால் உண்மையில்
நாம்தான்
காலத்தைக் கடந்து செல்கிறோம்
-
எனவே என் அன்பே
காலம் என்பது
வெறும் அளவுகோல் அல்ல
அது ஒரு பாடல்
நாம் அதன் சந்தம்
அது ஒரு நடனம்
நாம் அதன் அசைவுகள்
அது ஒரு கவிதை
நாம் அதன் சொற்கள்..
No comments:
Post a Comment