Friday 25 November 2022

ஈழ மண்ணின் காற் தடமே..

நெய்தல் நிலம் உற்பவித்த 

எங்களின நாயகனே 

உய்யவென காணும் வழி நீ ஐயா 

உந்தன்

பாதை ஒன்றே மீளும் வழி தானையா 


கண்ணிறைய உன் நினைவு 

காலமெல்லாம் உன் கனவு

மண்ணிறைய தேசம் இனி பூக்குமே 

இதழ் ஒவ்வொன்றையும் 

உந்தன் எண்ணம் ஆக்குமே.. 


ஈழமண்ணின் காற்தடமே 

எம்மினத்தின் போர்க்குணமே

ஆளும் தமிழ் வாழும் வரும் காலமே அதில் 

கோலம் பெறும் ஆகும் தமிழ் ஈழமே..

No comments:

Post a Comment