Tuesday 28 July 2020

விடியலுக்கான விதி..

இருள் விலகும் காலமதில் விலகும்
மிகையொலியில்
பூ அவிழும் பொழுதிலது அவிழும்
வானிருண்டு
மழைபொழியும் நேரமதிற் பொழியும்
உயிர்க் கொடையால்
மண்விடியும் பொழுதிலது விடியும்

தேசப் பிறப்பு என்றோ
தீர்மானிக்கப்பட்ட ஒன்று
ஆசீவகம் சொல்லும்
அழிக்கேலா நியதியது

உயிர் வார்த்த கனவு நிலம்
உருத்தோன்றும் வேளைவரத்
தோன்றும், இதன் பூப்பை
எதிரியே அறியாமல்
எம் பொருட்டு வடிவமைப்பான்
உதிரத்தை ஊற்றி
உயிர் கொடுத்த கனாவுக்கு
விதியென்னும் நியதி
வேண்டியதை வழங்கிடல் தான்
விதியாய் ஆகட்டும் என்பதென்
வேண்டுதல்
எந்தனின் ஆயுட் காலத்துள்
அந்த வரம் வருமோ அறியேன்
அதால்

விதியே அவ் விதிதன்னை
என்று நீ விதித்துள்ளாய்..?

No comments:

Post a Comment