Wednesday 8 July 2020

பரமசுகம்..

பூத்து நாளாகியும்
பொலிவொழுகும் முகத்தோடு
முட்டைக் கண் சுழன்றழைக்கும்
முன்னிரவுக் கனா

வனத்தியவள் கையில் வாளோடு
முட்டு ஆனால் பட்டுதென்றால்
வெட்டென்றாள்

கொட்டும் பெருமழைநான்
நீயோ குடையின்றி
சொட்டும் நனையாமல் செல்லோணும்
மீறியொரு
எட்டு நான் வைத்தாலும்
இரேன் கனவிலென்றாள்

பட்டுத் தெளிந்தவன் நான் பெளவியமே
அறிவாயா..
படாமல் முட்டுகின்ற பதமும்
பரம சுகம்..


No comments:

Post a Comment