Tuesday 28 September 2021

நாற்பதுகள்..


இளமைக்கும் முதுமைக்கும்

நடுவில் நிற்றல்

எவ்வளவு நொடிந்தாலும் அதையும் கற்றல்

அழகுக்கும் அன்புக்கும்

இடையில் சுற்றி 

வாழ்வுக்கு எதுவென்ற

வழியைப் பெற்றல் 


காசென்று காசென்று 

ஓடித் தேய்ந்து

யோசிக்க வாய்ப்பின்றி

உடலம் நொய்ந்து  

பேசவே ஆளின்றி 

முடிவில் எல்லாம் 

கடதாசி தானென்று 

புரிந்து கொள்ளல்


நாக்கிற்கும், மனசுக்கும்

இடையிற் சொல்லை 

நடப்பதற்குப் பழக்கிடுதல்

குரலைத் தாழ்த்தி 

ஆளுக்காள் தேவையுடை 

மொழியைத் தேர்ந்து 

உரைப்பதற்குத் தெரிந்திடுதல் 

இதனின் போது 

சுயத்திற்கும் அறிவிற்கும் 

இடையில் தோன்றும் 

பாதைதனைக் கண்டடைதல்

கொடுப்புப் பல்லை 

தெரியாமற் கடித்தபடி 

அதன் மேல் போதல் 


காமமும் காதலும் 

பதின்மம் போல 

ஆமாம் உண்டு தான் 

ஆனால் இப்போ 

ஓமகுண்டத்தை உள்ளே கட்டி

உள்வட்ட முதிர்விற்குள் எரித்தல்  

முன்போல் அவிப்பொருட்கள் 

தேடுகின்ற மனம்வேறின்றி 

புகைந்தடங்கி படிப்படியாய் 

பழகிப் போதல்


நாற்பதுகள் நானறிய 

வயதில் அழகு 

போர்க்களத்தில் பூப்பறிக்கும் 

தெளிவின் கனிவு ..


No comments:

Post a Comment