Friday 1 May 2020

உயிரால் எழுதல்..

என்ன தானென் எதிரி ஆகிலும்
கண்ணநீர் கசி கலைவடிவொன்றை நீ
என்புருகும் படி இயம்புவாயெனில்
என்னை மறந்துதுனை ஏற்றிப் புகழுமோர்
தன்மை கொண்டதென் மனசடா,
கலையிலே
உண்மை உண்டெனில் எதுவோ மூளையின்
கண்ணை மறைத்துக் கட்டவும், மனசது
உன்படைப்பதன் மார்பிலே உருளுதல்
என்னை மீறிய ஏதோ உணர்வினால்
உன்னப்பட்டு நடக்குது, ஆகையால்

உயிரை எழுது உந்தன் உயிரால் எழுது,
என்னுடை
அரசியல் வேறென்றும் அறி..


1 comment: