Monday 9 March 2015

உறைந்த காலம்..

தொடுவானக் கரையைத்
தொட்டுவிட எத்தனித்து
எட்டியெட்டித் தினமும்
ஏங்குகின்ற கடலலையாய்
தாபம்,

உடைந்திறந்த காலத்தில்
உடைந்தறுந்த முகங்களுடன்
மேலெழுந்து வரமுடியா
மிகு ஆழக் கிணற்றுக்குள்
ஆசை,

வரவே வராத
மழைக்காலம் பார்த்தேங்கி
கடைசி நீர்த்துளியைக்
கைகளுக்குள் பொத்தியுள்ள
கற்றாளைப் பெருமூச்சாய்
காமம்,

வாழ்வே கனவான வலியில்
புலன் சிதறி
கீறலை மறந்து விட்டோன்
கிறுக்கலில் சாம்பலாய்
ஊறி வந்ததிந்த உரு..

2 comments:

  1. வாழ்வே கனவான வலியில்
    புலன் சிதறி
    கீறலை மறந்து விட்டோன்
    கிறுக்கலில் சாம்பலாய்
    ஊறி வந்ததிந்த உரு..

    #சாம்பல் கரையுமுன்னே
    கண்டேன்
    காட்சிதனை
    கவிதை
    அழகு

    ReplyDelete