தனக்கென ஏதுமின்றித்
தன்னையே தந்தவரின்
கனவைத் தியாகத்தை
கட்டி உருவாக்கல் தான்
உண்மையாய் அவர்க்குச் செயும்
உயரிய அஞ்சலியாம்
மாறாக
எத்தனை கூட்ட மேளம்
எவரதிகம் , எக்குழுவின்
கூட்டத்திற் கதிகம்
கூட்டம் வந்ததென
தேட்டம் குவித்திடுதல் அல்ல
எண்ணிப் பார்
இச்சிறு சனத்தொகைக்கு
எத்தனை தியாகங்கள்
எச்சகத்திலும் எங்கும்
நடந்ததிலை, இதன் பிறகும்
கன்னை பிரிந்தடிபடுதல்
கயமையின் உச்சமடா
வாய்ப்பினியும் வாராது,
வழிவிடுங்கள் அமைப்புகளே
சாப்பயத்தை சட்டைசெய்யாச்
சரித்திரத்தில் இருந்தொருவன்
இளையோரை வழி நடத்த
எழட்டும்..