Thursday 1 May 2014

எமக்குமொரு சூரியன்

ஒன்றிரெண்டு பாதை விட்டோடி
எரிகல்லானதென்னவோ உண்மை தான்
ஆயினும்
அந்தச் சூரியனின் ஈர்ப்பிற் தான்
அத்தனை கோள்களும் ஒழுங்கு மாறாமல்
ஓடிக்கொண்டிருந்தன
திட்டமிட்டிணைந்து உருப்பெருத்த கருந்துளை
அன்றிந்தச் சூரியனை விழுங்கிற்று
உடன்போக்கை வரித்தன ஒன்றாயிருந்த கோள்கள்
எஞ்சியவை ஈர்ப்பின்றி
இங்கொன்றும் அங்கொன்றுமாக
முட்டி மோதியபடி,
பால்வெளியில் என்றோ ஒருநாள்
இன்னுமொரு பவித்திரச் சூரியன் எழும்வரை
இப்படித்தான் எல்லாமும் அங்கிங்காய்,
அந்த நாளும் வரும்..

No comments:

Post a Comment