உன் பிறந்தநாளில்
வீரச்சாவு
அழிவின்மையைப் பரிசளிக்கிறது
நந்திக் கடல் மணலில்
நடந்த கால்கள் இப்போது இல்லை
ஆனால் நீ தான் இன்னும் நடக்கிறாய்
விதைத்துச் சென்றாய்
நன்றி கெட்டவர்கள் நாம்
இன்னும் அறுவடை செய்யவில்லை
பாதிப் பாலம் கட்டிவிட்டாய்
மீதி காற்றில் நிற்கிறது
காற்றில் நடக்கக் கற்றுக்கொள்கிறோம்
மரணத்திற்கும் பிறப்பிற்கும்
இடையே ஒரு கோடு
அதை நீ அழித்துவிட்டாய்
ஒவ்வொரு தாயின் கருவிலும்
நீ மீண்டும் உருவாகிறாய்
பிறக்காத குழந்தைகளின்
முதற் பெயர் நீ
கடைசித் தோட்டா
உனை நோக்கி வந்தபோதில்
உடன் நின்றவர்களுக்கும்
மக்களுக்கும்
என்ன சொல்ல நினைத்திருப்பாய்..?
அண்ணா..!
இன்று உன் பிறந்தநாள்
கண்முன்னே நீ இல்லை
ஆனாலும் இல்லாமையிலும்
இன்னும் இருக்கிறாய்
மரணமற்றவர்களுக்கு வயதில்லை
நீ எப்போதுமே
அந்த இறுதி நொடியில்
உறைந்து நிற்கிறாய்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக